இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்


ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிஎஸ்எல்வி சி 14 என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் திட்டமிட்ட நேரத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது என விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம், ஒரே நேரத்தில் 10 செயற்கைகோளை விண்ணில் செலுத்தி சாதனை படைக்கப்பட்டது. இந்த வரிசையில் தயாரிக்கப்பட்ட மற்றொரு ராக்கெட் மூலம் 7 செயற்கைகோள்கள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.இந்த ராக்கெட் இன்று காலை 11.53 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து பாய்ந்தது. இந்தியாவுக்கு சொந்தமான ‘ஓஷன்சாட் 2’ என்ற செயற்கைகோள் கடல் வளத்தை ஆய்வு செய்யும். இதன் எடை 960 கிலோ.கடலில் மீன் நடமாட்டம் இருக்கும் பகுதியை கண்டறிந்து தகவல் அனுப்பும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 6 சிறிய செயற்கைகோள்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சொந்தமானது.ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதும் முதலில் ஒஷன்சாட் 2 செயற்கை கோள் விண்ணில் நிறுத்தப்படும். பின்னர், மற்ற செயற்கை கோள்கள் நிலை நிறுத்தப்படும்.

0 comments: